பிரித்தானியாவில் மீண்டும் தீவிரமடையும் கொரோனா பாதிப்பு! ஒரே நாளில் இத்தனை பேரா?
பிரித்தானியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவலில் தாக்கம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. 24 மணிநேரத்தில் மட்டும் 88, 376 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதோடு 146 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானியாவில் இதுவரை மொத்தமாக 1கோடியே 10இலட்சத்து 97ஆயிரத்து 851 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 46 ஆயிரத்து 937 பேர் உயிரிழந்துள்ளனர்.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 12இலட்சத்து 92ஆயிரத்து 539 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், Covid-19 வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 886 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, 40, 434 பேர் கடந்த 24 மணித்தியாலத்தில் குணமடைந்துள்ள நிலையில், இதுவரையில் வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 96இலட்சத்து 58ஆயிரத்து 375 ஆக அதிகரித்துள்ளது.