பெரும் ஆபத்தில் பிரித்தானியா: கடந்த 24 மணி நேரத்தில் 332 பேர் மரணம்!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 89ஆயிரத்து 213 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 332 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 27 இலட்சத்து 48 ஆயிரத்து 50 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1 இலட்சத்து 48 ஆயிரத்து 421 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 23 இலட்சத்து 27 ஆயிரத்து 923 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 868 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 42,145 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 1 கோடியே 2 இலட்சத்து 71 ஆயிரத்து 706 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.