பிரித்தானியாவில் தீவிரமடையும் கொரோனா தொற்று!
பிரித்தானியாவில் கடந்த 24 மணித்தியாலத்தில் 1 இலட்சத்து 89 ஆயிரத்து 846 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதியாகி செய்யப்பட்டுள்ள நிலையில், 203 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து பிரித்தானியாவில் 1 கோடியே 29இலட்சத்து 37 ஆயிரத்து 886 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 1இலட்சத்து 48 ஆயிரத்து 624 பேர் மரணமடைந்திருப்பதாக தெரிவந்துள்ளது.
பிரித்தானியாவில் தற்போது வரை Covid-19 தொற்றினால் பாதிக்கப்பட்டு 24 இலட்சத்து74ஆயிரத்து 536 பேர் அங்குள்ள வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும், கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு 868 பேர் தீவிர அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 43,020 பேர் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்த நிலையில், இதுவரையில் 1 கோடியே 3இலட்சத்து 14ஆயிரத்து 726 பேர் மொத்தமாக குணமடைந்துள்ளனர்.