பிரித்தானியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரம்!
ஓமிக்ரோன் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக பிரித்தானியாவில் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பிரித்தானியாவில் சமீப நாட்களாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ள்து. குறிப்பாக புதிய வகை கொரோனாவான Omicron பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. இதன் விளைவாக அங்கு தினசரி பாதிப்பு லட்சத்தில் பதிவாகி வருகிறது.
இந்நிலையில் நேற்று ஒரு நாளில் அங்கு 1 இலட்சத்து 29 ஆயிரத்து 471 பேருக்கு புதிதாக வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. தொற்று அதிகரித்து வந்தாலும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுதல் மற்றும் இறப்பு குறைவாகவே உள்ளது. இதற்கு காரணம் கொரோனா தடுப்பூசி என சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதேவேளை, கொரோனா தடுப்பூசியின் பூஸ்டர் ஓமிக்ரோனுக்கு எதிராக போராடும் எனவும் அவர் நம்புகின்றனர். இதனால் பிரித்தானியாவின் கொரோனா தடுப்பூசி திட்டக்குழு பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தும் பணியை தீவிரப்படுத்தி வருகிறது.
இது தொடர்பில் அந்த திட்டக்குழுவின் தலைவர் எமிலி லாசன் (Emily Lawson) கூறுகையில்,
“நாங்கள் பல்லாயிரக்கணக்கான மக்களை தொடர்பு கொண்டு பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்து, ஆரோக்கியமான பாதுகாப்பான புத்தாண்டை கொண்டாட வலியுறுத்தி வருகிறோம்” என்றார்.