இலங்கை மக்கள் தொடர்பில் அமெரிக்கா வெளியிட்டுள்ள தகவல்
இலங்கையில் நடைபெறும் மக்களின் ஆர்ப்பாட்டம் தொடர்பில் அமெரிக்க தூதுவர் ஜீலி சங் கருத்து வெளியிட்டுள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் மக்கள் ஈடுபடுவதற்கு உரிமை உள்ளது என, இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.
ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதற்கான உரிமையுள்ளது. இது ஜனநாயக வெளிப்பாட்டிற்கு அவசியமானது, நான் நிலைமையை உன்னிப்பாக அவதானிக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.
Sri Lankans have a right to protest peacefully - essential for democratic expression. I am watching the situation closely, and hope the coming days bring restraint from all sides, as well as much needed economic stability and relief for those suffering.
— Ambassador Julie Chung (@USAmbSL) April 2, 2022
எதிர்வரும் நாட்கள் அனைத்து தரப்பினருக்கும் பொறுமையை கொண்டுவரும் என கருதுகின்றேன்.
துயரத்தில் சிக்குண்டுள்ளவர்களிற்கு மிகவும் அவசியமான பொருளாதார ஸ்திரதன்மையும் நிவாரணத்தையும் கொண்டுவரும் என எதிர்பார்க்கின்றேன் அமெரிக்க தூதுவர் ஜீலி சங் மேலும் தெரிவித்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் இந்தத் தகவல்களை வெளியிட்டுள்ளார்.