அமெரிக்காவில் டரக் சாரதி ஒருவருக்கு லாட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்!
லாட்டரியில் 2000 டொலர்தான் கிடைக்கும் என நினைத்திருந்த சாரதி ஒருவருக்கு பம்பர் ஜாக்பாட் அடித்ததால் அவர் இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.
அமெரிக்காவின் மிச்சிகனில் ட்ரக் சாரதியாக இருப்பவர் 48 வயதான இல்லினாய்ஸ். இவருக்குதான் லாட்டரியில் ஜாக்பாட் அடித்திருக்கிறது.
லாட்டரி டிக்கெட் வாங்கும் பழக்கமுடைய இல்லினாய்ஸ் வழக்கம்போல அண்மையில் ஒரு லாட்டரி வாங்கியிருக்கிறார். அதில் அவருக்கு பணம் விழுந்திருப்பதாக லாட்டரி நிறுவனத்தில் இருந்து தகவல் வந்திருக்கிறது.
இதனையடுத்து அதிகபட்சம் தனக்கு 2000 டொலர் அதாவது ஒன்றரை லட்சம் ரூபாயே கிடைத்திருக்கும் என அவர் எண்ணியிருக்கிறார்.
ஆனால் இல்லினாய்ஸ்க்கு 1 மில்லியன் டொலர். இந்திய மதிப்பில் 7.9 கோடி ரூபாய் அவருக்கு லாட்டரி மூலம் கிடைத்திருக்கிறது.
“நான் என்னோட டிரக்குக்கு திரும்பியதும் டிக்கெட்டை ஸ்க்ராட்ச் செய்து பார் கோடை ஸ்கேன் செய்தேன். அதில், 1 மில்லியன் டாலரை வென்றதாக இருந்ததை பார்த்தபோது என்னால நம்பவே முடியல.
ஏஜென்சியில் இருந்து கால் வரும் வரை நான் வென்றதை நம்பவே இல்லை” என இல்லினாய்ஸ் கூறியிருக்கிறார்.
மேலும், லாட்டரியில் வந்த பணத்தை வைத்து புது ட்ரக் வாங்கப் போவதாகவும், எஞ்சிய பணத்தை சேமிப்பில் செலுத்தப்போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.