கனடாவில் வரலாறு காணாத வகையில் கனமழை பதிவு! தத்தளிக்கும் மக்கள்
கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள கடற்கரை நகரமான வான்கூவர் நகரை கடந்த திங்கட்கிழமை முதல் கனமழை கொட்டி தீர்த்து வருகின்றது.
இதனால் பிரிட்டிஷ் கொலம்பியா, வான்கூவர் தீவு உள்ளிட்ட பகுதிகளில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, காணாமல் போன மக்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி மெரிட், பிரின்ஸ்டன், அபார்ட்ஸ்போர்ட் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை மற்றும் மண்சரிவால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
ஏறத்தாழ ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேர் முகாம்களில் தங்கி உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அரசு உத்தரவை மீறி கால்நடைகளை பாதுகாக்கச் சென்ற விவசாயிகள், குடியிருப்புகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த மழை வெள்ளத்தில் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.