தடுப்பூசி போடாதவர்கள்... ரொறன்ரோ உணவகம் ஒன்று முன்வைத்த கோரிக்கை
இதுவரை தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளர்கள் உணவகத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள் என உரிமையாளர்களால் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
யார்க்கில் ஓக்வுட் அவென்யூ பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றே தடுப்பூசி போட்டுக்கொள்ளாத வாடிக்கையாளர்களை வெளியே அமர்ந்து கொள்ள கேட்டுள்ளது.
இதனால் தங்கள் ஊழியர்களும் வாடிக்கையாளர்களும் பாதுகாக்கப்படுவார்கள் என நம்புவதாக அந்த உணவக உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும், தங்கள் ஊழியர்கள் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளதாகவும், இது தடுப்பூசி தேவையா இல்லையா என்பது தொடர்பான விவாதப் பொருள் அல்ல எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தங்களின் இந்த முடிவால் சில வாடிக்கையாளர்களை இழக்க நேரிடலாம், இருப்பினும் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டியது நமது கடமை என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.