அமெரிக்க நில எல்லைகள் திறப்பு... கனேடியர்கள் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டியவை
நீண்ட ஒன்றரை ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்க நில எல்லைகள் நவம்பர் 8ம் திகதி முதல் திறக்கப்படும் நிலையில் கனேடிய மக்களும் கவனிக்க வேண்டிய விடயம் குறித்து தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலுக்கு பின்னர் 2020 மார்ச் மாதத்தில் இருந்து அமெரிக்க நில எல்லைகள் மூடப்பட்டது. தற்போது நவம்பர் 8ம் திகதி முறைப்படி நில எல்லைகளை அமெரிக்க நிர்வாகம் திறக்க இருக்கிறது.
ஆனால் ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே, கனேடிய நில எல்லைகள் அமெரிக்கா உள்ளிட்ட சுற்றுலா பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், முழுமையாக தடுப்பூசி போட்டுக்கொண்ட கனேடியர்கள் மட்டுமே நில எல்லைகள் மற்றும் படகுகள் வாயிலாக அனுமதிக்க உள்ளனர்.
மட்டுமின்றி, இரண்டாவது தடுப்பூசி அல்லது ஜோன்சன் நிறுவனத்தின் ஒற்றை டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்ட 14 நாட்களுக்கு பின்னரே பயணிகளை அனுமதிக்க உள்ளனர்.
அமெரிக்க சுகாதாரத்துறையால் அனுமதி அளிக்கப்பட்ட தடுப்பூசிகள் போட்டுக்கொண்டவர்களை மட்டுமே தற்போது அனுமதிக்க உள்ளனர். இதில், பைசர், மாடர்னா, ஆஸ்ட்ராசெனகா மற்றும் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, கலப்பு தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களையும் கருத்தில் கொண்டு அமெரிக்காவில் அனுமதிக்க முடிவு செய்துள்ளனர். மேலும், பயணிகளிடம் வாய்மொழியாக கேட்கப்படும் கேள்விகளுக்கும் பதில் கூற வேண்டி இருக்கும்.
அமெரிக்காவுக்கு செல்லும் காரணம் தொடர்பிலும் கேட்கப்படலாம். தடுப்பூசி போட்டுக்கொண்டதற்கான தரவுகளையும் சமர்ப்பிக்க வேண்டும். QR குறியீடுடன் பிரதியெடுக்கப்பட்டதோ டிஜிட்டலாகவோ தடுப்பூசி ஆவணங்களை சமர்ப்பிக்கலாம்.
ஆனால் 18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி கட்டாயம் அல்ல என அமெரிக்க நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. மேலும், நில எல்லைகளை கடக்க அவர்களுக்கு தொற்று இல்லை என்ற சான்றிதழும் தேவை இருக்காது.
கனடாவுக்கு திரும்புவோருக்கும் தொற்று இல்லை என்ற சான்றிதழ் தேவையில்லை. ஆனால் கனடாவுக்கு திரும்பும் 72 மணி நேரத்திற்குள் PCR சோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இது 5 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் பொதுவானது என கனேடிய நிர்வாகம் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும், சிலருக்கு கொரோனா சோதனை முன்னெடுக்கப்படும் நிலையும் கனேடிய எல்லையில் ஏற்படலாம் என கூறப்படுகிறது.