பாகிஸ்தான் மீது இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து அமெரிக்காவின் கருத்து
பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. கடந்த 9-ந் திகதி இந்திய ஏவுகணை ஒன்று பாகிஸ்தான் பகுதியில் விழுந்தது.
பராமரிப்பு பணியின்போது தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தவறுதலாக பாய்ந்து சென்று விட்டதாகவும், இதுகுறித்து உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருப்பதாகவும் இந்திய ராணுவ அமைச்சகம் விளக்கம் அளித்தது.ஆனால் பாகிஸ்தான் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்தது.
இந்நிலையில், பாகிஸ்தான் பகுதியில் இந்திய ஏவுகணை விழுந்தது குறித்து வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் சந்திப்பில் கூறும்போது, நாங்கள் கேள்விப்பட்ட வரையில் இந்திய ஏவுகனை, தாக்குதலுக்காக ஏவப்பட்டதற்கான எந்த அறிகுறியும் இல்லை.
இந்த சம்பவம் ஒரு விபத்தைத் தவிர வேறொன்றுமில்லை. இதற்கு மேல் இதுபற்றி கூற எந்த கருத்தும் இல்லை என்று அவர் கூறினார்.