தாக்குதலுக்கு பின் முதல்முறையாக தூதரகத்திற்குத் திரும்பிய அமெரிக்க இராஜதந்திரிகள்!
உக்ரைனுக்கான அமெரிக்க உயர்மட்ட தூதரக அதிகாரி Kristina Kvien மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை உகரைன் தலைநகர் Kyiv இற்கு சென்றுள்ளனர்.
உக்ரைன் தலைநகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தை விரைவில் மீண்டும் திறப்பதாக கடந்த மாதம் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் Antony Blinken தெரிவித்திருந்தார்.
கடந்த பெப்ரவரி 24 ஆம் திகதி உக்ரைன் மீது ரஷ்யாவின் போர் தொடுப்பதற்கு முன்னதாக, பாதுகப்பு காரணங்களால் நாட்டை விட்டு வெளியேறிய இராஜதந்திரிகள் கடந்த மாதம் உகரைனின் மேற்கு நகரமான லிவிவுக்குத் திரும்பத் தொடங்கியிருந்தனர்.
அதன் பின்னர், கிய்வில் முழு அமெரிக்க இருப்பை மீண்டும் தொடங்குவதற்காக தூதரக அதிகாரி Kristina Kvien மற்றும் அவரது குழுவினர் Kyiv ஐ சென்றடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.