கார்க் தீவை கையகப்பட்டுத்த அமெரிக்க திட்டம்; இராணுவ நிபுணர்கள் கேள்வி!
ஈரானின் உயிர்நாடியாகக் கருதப்படும் கார்க் தீவை (Kharg Island) அமெரிக்கா கைப்பற்ற நினைப்பதாக சர்வதேஅ ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ஈரானுடனான "யுத்தத்தில் வெற்றி பெற்றுவிட்டதாக" அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ள போதிலும், தரை மற்றும் நீரில் பயணிக்கக்கூடிய போர்க்கப்பல்கள், தரையிறங்கும் வாகனங்கள் மற்றும் ஆயிரக்கணக்கான மெரைன் படையினரை அப்பிராந்தியத்தில் நிலைநிறுத்தியுள்ளமை குறித்து இராணுவ நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

ஈரானின் உயிர்நாடி Kharg Island
குறிப்பாக, ஈரானின் கார்க் தீவை (Kharg Island) கைப்பற்றுவதற்காக இந்த நகர்வுகள் மேற்கொள்ளப்படுகிறதா என சி.என்.என் செய்திச் சேவை செய்தி வெளியிட்டுள்ளது. ஈரானின் மசகு எண்ணெய் ஏற்றுமதியில் சுமார் 90% கையாளப்படும் கார்க் தீவு, அந்நாட்டின் பொருளாதார உயிர்நாடியாகக் கருதப்படுகிறது.
இத்தீவைக் கைப்பற்றுவதன் மூலம் ஈரானின் பொருளாதாரத்தை முடக்க அமெரிக்கா திட்டமிடுகிறதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஆயிரக்கணக்கான மெரைன் படையினர் மற்றும் கடற்படை வீரர்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது.
ஒருவேளை அமெரிக்கா இந்த சிறிய தீவை வெற்றிகரமாகக் கைப்பற்றினாலும், உலகளாவிய எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில் ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மீண்டும் திறக்க ஈரானை வற்புறுத்துவதற்கு இது போதுமான உத்தியாக இருக்குமா என்று வல்லுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்த விவகாரம் வளைகுடா பிராந்தியத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது .