அமெரிக்காவின் வரி விதிப்பு நியாயமற்றது ; இந்திய அரசு
இந்திய இறக்குமதி பொருட்களுக்கு 50% வரி விதிக்கப்படும் என்ற அமெரிக்காவின் உத்தரவு நியாயமற்றது என இந்திய மத்திய அரசு அறிவித்துள்ளது.
அமெரிக்காவின் வரி உயர்வு குறித்து வெளியுறவுத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் சமீப நாட்களாக ரஷ்யாவிலிருந்து மசகு எண்ணெய் இறக்குமதி செய்வதை அமெரிக்கா குறிவைப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா தனது தேச நலன்களை பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாகவும் சந்தை காரணிகளை அடிப்படையாகக் கொண்டே இந்தியாவின் இறக்குமதி உள்ளதாக ஏற்கனவே அமெரிக்காவக்குத் தெளிவுபடுத்தியள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், 140 கோடி மக்களின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்துடன் இந்தியா செயல்படுவதாகவும் விளக்கமளித்துள்ளது.