அமெரிக்கா- டெக்ஸாஸ் மாகாணத்திலுள்ள இரசாயண ஆலை வெடிப்பு!
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் உள்ள இரசாயன ஆலையில் பயங்கர வெடிப்பு ஏற்பட்டதையடுத்து அருகாமையில் வசிக்கும் மக்கள் கதிர்வீச்சுத் தாக்குதலைத் தவிர்ப்பதற்காக வீடுகளை விட்டு ஒரு மைல் தொலைவிற்கு வெளியேறும்படி அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களில் சென்று தங்குமாறும் கார்களில் ஏசிக்களை நிறுத்தும்படியும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதிப்பைத் தடுப்பதற்காக தனியார் பள்ளியொன்று மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த ஆலை வெடிப்பிற்கான காரணம் பற்றி இன்னும் அறியப்படவில்லை எனவும் இவ்விபத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் பற்றியும் இன்னும் எவ்வித ஆய்வு நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.