ஒமிக்ரான் யாரையும் விட்டு வைக்காது - குடும்பத்தை கொலை செய்து தப்பி ஓடிய பேராசிரியர்! பரபரப்பு சம்பவம்
உத்தரபிரதேசத்தில் பேராசிரியர் ஒருவர் ஒமிக்ரான் கொரோனா வைரஸ் மீதான பயம் காரணமாக தனது மனைவி மற்றும் குழந்தைகளை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் - கான்பூரில் உள்ள கல்யாண் பூரில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரி ஒன்றில், தடயவியல் பேராசிரியராக பணிபுரிந்து வந்தவர் சுஷில் சிங் (வயது 55) என்பவரே இவரது மனைவி சந்திரபிரபா(வயது 50) மகன் ஷிகார் சிங் (வயது 21) மகள் குஷி சிங் (வயது 16) கொலை செய்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.
இச்சம்பவம் இப்பகுதி மக்களை பெரிதும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
இந்நிலையில் கொலை செய்து தப்பியோடுவதற்கு முன்பு, வாட்ஸ் அப்-ல் மெசேஜ் ஒன்றை தனது தனது சகோதரருக்கு அனுப்பியுள்ளார்.
அதில் 'ஒமிக்ரான் மாறுபாட்டில் இருந்து யாரும் காப்பாற்றப்பட மாட்டார்கள்'. எனவே அனைவரையும் விடுவிக்கிறேன்' என்று தெரிவித்திருந்தார்.
அந்த மெசேஜை பார்த்து அதிர்ச்சியடைந்த சகோதரர், உடனே அவரின் வீட்டுக்குச் சென்றுள்ளார். அங்கு பூட்டி இருந்த வீட்டை உடைத்து திறந்து பார்த்த போது தனது சகோதரரின் மனைவி மற்றும் குழந்தைகள் சடலமாக கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்.
இதனை தொடர்ந்து பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பொலிசார் குறித்த பேராசிரியரின் டைரியையும் கைப்பற்றினர். அதில், தனது குடும்பத்தினரை கொலை செய்தது குறித்தும், ஒமிக்ரான் மாறுபாட்டைப் பற்றியும் அவர் எழுதியுள்ளார்.
'அதில் இப்போது, இறந்த உடல்களை எண்ணுவது தேவையில்லை' என்றும், கொரோனா வைரஸ் அனைவரையும் கொல்லும்' என்றும் அவர் எழுதி உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து மேலதிக விசாரணை நடைபெற்று வருவதாவும், கொலை செய்த பேராசிரியரின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை தீவிரமாக தேடி வருவதாகவும் பொலிசார் கூறியுள்ளனர்.