லண்டனில் தடுப்பூசி போட்ட தமிழருக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்!
லண்டனில் ஆஸ்ரா செனிக்கா கொரோனா தடுப்பூசி போட்ட தமிழர் ஒருவருக்கு ரத்தக் கட்டி ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய அரசு 20 மில்லியன் மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டதாக கூறுவதுடன் அவர்களில் , வெறும் 70 பேருக்கு மட்டுமே ரத்தக் கட்டி ஏற்பட்டதாக கூறியுள்ளது.
இந்த நிலையில் குறித்த நபருக்கு ஊசி போடப்பட்டு சுமார் 14 நாட்களில் காலில் சிறிய கட்டிகள் தோன்றியதுடன் கால் விக்கமடைந்ததை அடுத்து அவர் உடனே மருத்துவரை அணுகியுள்ளார்.
இந்நிலையில் அவரை பரிசோதித்த மருத்துவர் கட்டிகளை கரைக்கும் மருந்தை முதலில் கொடுத்து, மேலதிக சிகிச்சைக்காக அவரை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் இவ்வாறு பாதிக்கப்பட்டவர் 56 வயதானவர் எனவும் கூறப்படுகின்றது.
இதேவேளை ஆஸ்ரா செனிக்கா தடுப்பூசி, இளைஞர்கள் மத்தியில் தான் ரத்தக் கட்டிகளை தோற்றுவிக்கிறது என கூறப்படும் நிலையில் நோர்வே நாட்டில் ஆஸ்ரா செனிக்காவை போட்டு உயிரிழந்த 13 பேருமே முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.