அம்மை நோயால் பாதிக்கப்பட்ட ஆப்கான் அகதிகளுக்கு தடுப்பூசி
ஜேர்மனியில் அமெரிக்கா இராணுவ தளங்களில் ஆப்கான் அகதிகள் சிக்கி தவிப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
அமெரிக்கா நாட்டுக்கு அழைத்து வரப்பட்ட ஆப்கான் மக்களில் ஒரு சிலருக்கு மீசல்ஸ் என்னும் அம்மை னாய் தாக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்கா அரசானது ஆப்கான் நாட்டு மக்களை விமான நிலையத்திலிருந்து அழைத்து வருவதை நிறுத்தியது.
இந்த காரணத்தால் ஜேர்மனியின் Ramstein மற்றும் Kaiserslautern ஆகிய இடங்களில் அமைந்துள்ள அமெரிக்க இராணுவ தளங்களில் எஞ்சியுள்ள அகதிகளை தங்க வைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தற்போது ஜேர்மனின் அமெரிக்கா விமான தளத்தில் தங்கி உள்ளவர்களுக்கு மண்ணன், தட்டம்மை, ரூபெல்லா மற்றும் சின்னம்மை ஆகிய நோய்களுக்கான தடுப்பூசி போடப்பட்டுள்ளது.