இந்தியாவில் தயாரித்த தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம்?
இந்திய நிறுவனம் ஒன்று கொரோனாவுக்கு எதிராக தயாரித்த தடுப்பூசியை (Covaxin vaccine) அவசர தேவைக்கு பயன்படுத்துவது பற்றி உலக சுகாதார நிறுவனம் (World Health Oraganization) அடுத்த வாரம் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.
கோவாக்சின் தடுப்பூசியை இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்த அமெரிக்காவின் பைசர் நிறுவனம் கண்டுபிடித்த தடுப்பூசி, பிரிட்டனின் அஸ்ட்ராஜெனகா பெயரில் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளுக்கு உலக சுகாதார நிறுவனம் (World Health Oraganization) அங்கீகாரம் அளித்துள்ளது.
இந்நிலையில் தற்போது இந்தியா நிறுவனம் தயாரித்த கோவாக்சின் தடுப்பூசிக்க்கு அங்கீகாரம் வழங்க உலக சுகாதார நிறுவனத்திடம் விண்ணப்பிக்கப்பட்டது.
இதுதொடர்பாக மேலும் சில தரவுகளை சமர்பிக்கும்படி பாரத் பயோடெக் நிறுவனத்திடம் உலக சுகாதார அமைப்பு கேட்டுக் கொண்டதால் சில தரவுகளை குறித்த நிறுவனம் கடந்த மாதம் 27 ஆம் திகதி சம்ர்பித்தது.
பாரத் பயோடெக் நிறுவனம் அளித்த குறித்த தரவுகளை தனிப்பட்ட மருத்துவ குழுவினரும், உலக சுகாதார அமைப்பும் ஆராய்ந்து அடுத்த வாரம் இறுதி முடிவை எடுக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.