உங்கள் குடும்பத்தினரை நினைத்துப் பாருங்கள்: கனேடிய தாயாரின் உருக்கமான வேண்டுகோள்
கனடாவில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரின் புகைப்படத்தை பகிர்ந்து கொண்டு பெண் ஒருவர் உருக்கமான வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.
விக்டோரியாவில் உள்ள ராயல் ஜூபிலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் 39 வயதான ஜோஷ் மெல்லர். தடுப்பூசி போட்டுக்கொள்ள மறுப்பு தெரிவித்து வந்த ஜோஷ் மெல்லர், கொரோனா பாதிப்புக்குள்ளாகி தற்போது மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜோஸ் மனைவி மிராண்டா இரண்டு டோஸ் தடுப்பூசியும் போட்டுக்கொண்டுள்ளார். ஆனால் அவரது கணவர் இணையத்தில் படித்த தவறான தகவலை நம்பி, கொரோனா தடுப்பூசிகள் பாதுகாப்பற்றது என்று வாதிட்டு வந்துள்ளார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவை பொறுத்தமட்டில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் மக்களில் 85 சதவீதம் பேர்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள் என மருத்துவர்கள் தரப்பு தெரிவித்துள்ளது.
இந்த நிலையிலேயே, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள தமது கணவரின் புகைப்படத்தை வெளியிட்டு, பொதுமக்களிடன் உருக்கமான கோரிக்கை முன்வைத்துள்ளார்.
உங்களுக்காக தடுப்பூசி போட்டுக்கொள்ளாமல் இருந்தாலும், உங்கள் குடும்பத்தினரை கருத்தில் கொள்ளுங்கள் என மிராண்டா கண்கலங்கியுள்ளார்.