வான்கூவாரில் இளைஞர்கள் மீது தாக்குதல்கள் குறித்து எச்சரிக்கை
வான்கூவாரில் இளைஞர்கள் மீதான தாக்குதல்கள் சம்பவங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
பாதுகாப்பற்ற நிலையை உணரும் இளைஞர் யுவதிகள் உடனடியாக தமக்கு அறிவிக்குமாறு பொலிஸார் அறிவுறுத்தல் வழங்கியுள்ளனர்.
இளைஞர் யுவதிகள் மீது தாக்குதல்கள், கொள்ளைகள் உள்ளிட்ட பல்வேறு துன்புறுத்தல் சம்பவங்கள் அண்மைய நாட்களில் வெகுவாக அதிகரித்துள்ளது என வான்கூவார் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஏற்கனவே பல இளைஞர் யுவதிகள் தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளனர் என பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து தாக்குதல் சம்பவங்கள் பற்றிய விபரங்களும் பதிவாகவில்லை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மது போதையில் இளைஞர்கள் சக இளைஞர்கள் மீது குற்றச் செயல்களை கட்டவிழ்த்துவிடும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.