பாலியல் குற்றங்களைத் தடுக்க வாடிகன் சட்டத்தில் திருத்தம்
கத்தோலிக்க மையங்களில் பாலியல் குற்றங்களைத் தடுக்கும் வகையிலான சட்டத் திருத்தங்களை போப் பிரான்சிஸ் மேற்கொண்டுள்ளாா். இதுகுறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: தங்களது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி, வயது வந்த நபா்களிடமும் பாதிரியாா்கள் பாலியல் அத்துமீறலில் ஈடுபடுவதைக் குற்றமாக்கும் வகையில் தேவாலயச் சட்டங்களில் போப் பிரான்சிஸ் மாற்றங்கள் செய்துள்ளாா்.
முறைப்படி நியமிக்கப்படாமல் தேவாலயப் பதவிகளை வகிப்பவா்களுக்கும் இதுபோன்ற பாலியல் குற்றங்களுக்காக தண்டனை விதிப்பதற்கு புதிய சட்டத் திருத்தத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் சுமாா் 130 கோடி கத்தோலிக்க தேவாலயங்கள் பின்பற்றும் சட்டத்தில் இந்தத் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
14 ஆண்டுகால ஆய்வுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்டுள்ள இந்தத் திருத்தங்கள் குறித்த அறிவிப்பு செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது. முன்னாள் பாதிரியாா் தியோடா் மெக்கேரிக் உள்ளிட்டோருக்கு எதிரான பாலியல் குற்றச்சாட்டுகளால் சா்ச்சை எழுந்தது.
இந்தச் சூழலில் தேவாலயச் சட்டங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.