ஒன்ராறியோவில் இரு வாகனங்கள் மோதி விபத்து – ஒருவர் பலி
ஒன்ராறியோவில் உள்ள கலிடன் பகுதியில் வியாழன்று மாலை இடம்பெற்ற இரு வாகனங்கள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இன்னொருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து மாலை 5 மணிக்கு முன்பாக ஹைவே 9 மற்றும் மவுண்ட் பிளெசன்ட் சாலை சந்திப்பில் நடந்துள்ளது.
ஒரு வாகன ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக, மேலும் மற்றொரு வாகன ஓட்டுநர் பலத்த அல்லாத காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்றும், இதற்கான விசாரணை நடைபெற்று வருகின்றது.
விபத்து விசாரணைக்காக, ஹைவே 9 வீதியின் ஹைவே 50 முதல் மவுண்ட் பிளெசன்ட் சாலை வரையிலான பகுதி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.