கொரோனாவுக்கு பலியான தாய்; இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற பச்சிளம் குழந்தை
பிரித்தானியாவில் பச்சிளம் குழந்தை ஒன்று தனது தாயின் இறுதிச் சடங்கில் பங்கேற்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரின் கண்களில் அது கண்ணீரை வரவழைத்துள்ளது.
வடக்கு அயர்லாந்தில் உள்ள லண்டன்பெர்ரியில் வசித்து வந்த சமந்தா வில்லிஸ் (35) எனும் பெண் நிறைமாத கர்ப்பிணியான இருந்துள்ளார். இந்நிலையில் தடுப்பூசி போடாததால் கொரோனா தொற்றால் கடந்த 16 நாட்களாக அவதிப்பட்டு வந்துள்ளார்.
இதையடுத்து சமந்தாவுக்கு அல்ட்னாகேள்வின் எனும் மருத்துவமனையில் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. ஆனால் சமந்தா கொரோனா தொற்று காரணமாக அந்த குழந்தையை கையில் வாங்கிய பார்க்க இயலாத நிலையில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதனைத்தொடர்ந்து திங்கட்கிழமை அன்று சமந்தாவின் இறுதி ஊர்வலம் நடைபெற்றபோது புதிதாக பிறந்த அந்த பச்சிளம் குழந்தை தனது தாயின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றுள்ளது.
இது குறித்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

