ஆப்கானிஸ்தானில் வன்முறையால் 460 குழந்தைகள் பலி! யுனிசெப் தகவல்!
ஆப்கானிஸ்தானில் 2021ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் தீவிர வன்முறை காரணமாக 460 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக யுனிசெப் தகவல் வெளியிட்டுள்ளது.
யுனிசெப் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த வியாழக்கிழமை காலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பெண் குழந்தைகள், இரண்டு ஆண் குழந்தைகள் உள்பட ஒன்பது பேர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
குண்டுஸ் பகுதியில், போர்க்காலத்தில் பதுக்கிவைக்கப்பட்ட குண்டு திடீரென வெடித்ததால் அக்குடும்பமே பரிதாபமாக பலியாகியுள்ளதுடன் இந்த குண்டுவெடிப்பால் வேறு மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த மருத்துவர் முகமது ஃபாஹிம் “தினசரி மூளை முடக்கத்தால் பாதிக்கப்பட்ட 10 முதல் 15 குழந்தைகள் தன்னிடம் அழைத்துவரப்படுவதாகவும்” கூறியுள்ளார்.
யுனிசெப் ஆப்கானிஸ்தானில் குழந்தைகளின் நிலை குறித்து தனது வருத்தம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்தாகும்.