இலங்கை விமான நிலையங்களில் நாளை முதல் நிறுத்தப்படும் முக்கிய சேவைகள்
இலங்கையில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் நாளை வெள்ளிக் கிழமை சில சேவைகள் நிறுத்தப்படும் என இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அனைத்து சர்வதேச விமான நிலையங்களின் முக்கிய பிரமுகர்களுக்கான முனையம் மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த நபர்களுக்கான முனையம் ஆகியவற்றின் பணிகள் நிறுத்தப்படும் என அதிகாரிகள் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில், நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் வரை முக்கிய பிரமுகர்கள் மற்றும் வணிக முக்கியத்துவமிக்க பிரமுகர்களின் முனையங்களில் பணிகளை நிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நாளைய தினம் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை நடத்த 200க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் அழைப்பு விடுத்துள்ளன. அத்துடன் நாளைய தினம் ஹர்த்தாலை நடத்த தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கமும் அழைப்பு விடுத்துள்ளது.