புத்திர சோகத்தினால் உயிரை மாய்த்துக் கொண்ட தந்தை
வெர்ஜினியாவில் நபரொருவர் புத்திர சோகத்தினை தாங்கிக்கொள்ள முடியாது தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
18 வது மாத மகன் உயிரிழந்த சோகத்தினால் குறித்த நபர் இவ்வாறு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
தனது 18 மாத மகனை காரில் தனியே விட்டுவிட்டு சென்ற தந்தை சில மணித்தியாலங்களின் பின்னர் வந்து காரை திறந்து பார்த்தபோது மகன் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளார்.
அதிக வெப்பம் காரணமாக குறித்த சிறுவன் உயிரிழந்துள்ளான் என தெரிவிக்கப்படுகின்றது.
சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் சேர்க்க வேண்டிய மகனை மறந்து காரிலேயே விட்டுவிட்டு பணிக்காக சென்ற காரணத்தினால் குறித்த சிறுவன் உயிர் இழந்துள்ளான்.
இந்த சம்பவத்தினால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுவனின் தந்தை, வீட்டுக்கு வந்து சிறுவனின் சடலத்தை வீட்டில் வைத்து விட்டு, துப்பாக்கியால் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
இந்த சம்பவம் குறித்த பிரதேசத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தந்தை மற்றும் மகனின் மரணங்கள் தொடர்பில் போலீசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.