கனடா தேர்தல்: கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் வாக்களிக்க முடியுமா?
கனடாவில் செப்டம்பர் 20 அன்று தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அன்று கொரோனா காரணமாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்கள் தேர்தலில் வாக்களிக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதற்கு பதில் என்னவென்றால், ஒருவருக்கு கொரோனா அல்லது அவர் கொரோனா தொற்றுடையவருடன் தொடர்பில் இருந்தார் என்பதற்காக தனிமைப்படுத்தப்பட்டிருந்தால், அவரால் செப்டம்பர் 20 அன்று தேர்தலில் வாக்களிக்க முடியாது.
கனடா தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பு ஒன்றில், வாக்காளர் யாராவது தங்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என கருதினாலோ, அல்லது உங்களுக்கு கொரோனா பரிசோதனையில் கொரோனா இருப்பதாக தெரியவந்தாலோ வீட்டிலேயே இருங்கள், வாக்களிக்கும் இடத்துக்கு வரவேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்போதைய சூழலில் தனிமைப்படுத்தலை விலக்கிக்கொள்வது கொரோனா பரவல் அதிகரிக்க வழிவகை செய்யும் என மருத்துவர்களும் கருதுகிறார்கள்.
உங்களுக்கு கொரோனா தொற்று இருக்கும் பட்சத்தில் உங்களால் பாதுகாப்பாக வாக்களிக்க இயலாது என்று கூறும் ரொரன்றோ பல்கலைக்கழக பேராசிரியரும் மருத்துவருமான Fahad Razak, அப்படி கொரோனா தொற்று இருக்கும் நிலையில் நீங்கள் வாக்களிக்க வருவதால் மற்றவர்களுக்கு, குறிப்பாக இதுவரை தடுப்பூசி பெற்றுக்கொள்ள இயலாதவர்கள் உட்பட மற்றவர்களுக்கு, உங்களிடமிருந்து கொரோனா தொற்று பரவும் அபாயம் மிக அதிகம் என்கிறார்.