மருத்துவ சிகிச்சைக்காக ஓராண்டாக காத்திருந்த இளம்பெண்... ஒரே வாரத்தில் நேர்ந்த பரிதாபம்
பிரித்தானியாவில் புற்றுநோய் தொடர்பில் மருத்துவ சிகிச்சைக்காக ஓராண்டு காலம் காத்திருந்த இளம்பெண் ஒருவர் ஒரே வாரத்தில் பரிதாபமாக மரணமடைந்துள்ள சம்பவம் மொத்த குடும்பத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
19 வயதேயான அமெலியா எல்லர்பி என்பவருக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 50 காசு அளவில் கட்டி ஒன்று அவரது புறமுதுகில் காணப்பட்டது.
இதனையடுத்து அருகாமையில் உள்ள மருத்துவரை நாடிய அவருக்கு, வெறும் ஆண்டிபயோடிக் மட்டுமே அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒவ்வொரு 6 வாரத்திற்கும் ஒருமுறை மருத்துவ சிகிச்சைக்காக அருகாமையில் உள்ள மருத்துவமனையை தொடர்பு கொண்டு வந்துள்ளார்.
ஆனால் ஏமாற்றமே மிஞ்சியுள்ளது. இதனையடுத்து நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் A&E-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதில் ஸ்கேன் செய்ததில் அவருக்கு புற்றுநோய் நான்காவது கட்டத்தில் இருப்பது உறுதியானது.
மட்டுமின்றி, புற்றுநோய் உடலில் முக்கிய பகுதிகளில் பரவியுள்ளதும் கண்டறியப்பட்டது. இதனிடையே, அவருக்கு ஏற்பட்டுள்ளது தீவிர புற்றுநோய் என மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்ட நிலையில் கடந்த ஜூன் 12ம் திகதி அமெலியா சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
நீண்ட ஓராண்டு காலம் மருத்துவ சிகிச்சைக்காக காத்திருந்த அவருக்கு, வாய்ப்பு அமையாமல் போகவே, இறுதியில் புற்றுநோய் உறுதி செய்யப்பட்ட ஒரே வாரத்தில் அவர் மரணமடைந்துள்ளது மொத்த குடும்பத்தையும் நண்பர்களையும் கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.