வெனிசுலா வான்வெளியில் பறக்கும் விமானங்களுக்கு எச்சரிக்கை
இராணுவ நடவடிக்கைகள் காரணமாக, வெனிசுலா வான்வெளியில் விமானங்கள் பறக்கும் போது எச்சரிக்கையாக இருக்குமாறு அமெரிக்க பெடரல் விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இதனால் உலகளாவியரீதியில் பெரும்பாலான விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமானசேவைகளை இரத்து செய்துள்ளன.

காலவரையின்றி வெனிசுலாவுக்கான விமான சேவை நிறுத்தம்
ஸ்பெயின், போர்த்துக்கல், சிலி, கொலம்பியா, பிரேஸில், டிரினிடாட் டொபாகோ ஆகிய நாடுகளைச் சேர்ந்த சில விமான நிறுவனங்கள் வெனிசுலாவுக்கான விமான சேவைகளை இரத்து செய்துள்ளன.
இதேவேளை ஆறு விமான நிறுவனங்கள் காலவரையின்றி வெனிசுலாவுக்கான விமான சேவைகளை நிறுத்தி வைத்துள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் துருக்கி எயார்லைன்ஸ் 28ஆம் திகதி வரை வெனிசுலாவுக்கான விமான சேவைகளை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.