ஒன்ராறியோவில் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத இளையோருக்கு எச்சரிக்கை
ஒன்ராறியோவில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத இளையோர் அதிகளவில் தொற்றுக்குள்ளாகி வருவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த மூன்று மாதங்களில், தொற்றுக்குள்ளாகிய 19 தொடக்கம் 29 வயதுக்கு இடைப்பட்ட வயதினரில், 96 வீதமானோர் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளவில்லை எனவும் அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அதன்படி 12 தொடக்கம் 17 வயதுக்குட்பட்ட தொற்றாளர்களில் 99 வீதமானோர் தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் என்றும், தெரியவந்துள்ளது.
ஒன்ராறியோ முழுவதிலும் ஏனைய வயதினரை விட இந்த வயதினரே அதிகளவில் தொற்றுடன் வருகிறார்கள் என்றும் சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனவே இளவயதினர் விரைவாக தடுப்பூசி போட்டுக் கொள்ள முன்வர வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.