கனடாவில் ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலம் மோசடி
ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் பலரை ஏமாற்றி லட்சக்கணக்கில் பணம் பறித்த குற்றத்திற்காக ஏற்கனவே தண்டனை பெற்ற நபர், தற்போது பிணை விதிகளை மீறியதற்காக மீண்டும் தேடப்பட்டு வருகிறார்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவைச் சேர்ந்த புரோடி ப்ரூக்ஸ் என்பவர், ஆன்லைன் டேட்டிங் செயலிகள் மூலம் சுமார் 14 பேரிடம் (பெரும்பாலானோர் பெண்கள்) பழகி, அவர்களை ஏமாற்றியதாகக் கடந்த ஆண்டு ஒப்புக்கொண்டார்.
சுமார் 90,000 டாலர்கள் மோசடி செய்யப்பட்டுளள்தாகவும், பாதிக்கப்பட்டவர்களிடம் நெருக்கமாகப் பழகி, அவசர தேவை எனப் பணம் கடன் வாங்குவதாகவும், பின்னர் பணத்தைத் திரும்பக் கேட்கும்போது அவர்களைத் தவிர்த்து விடுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த 2023-ல் கைது செய்யப்பட்ட இவருக்கு, சில நிபந்தனைகளுடன் பிணை வழங்கப்பட்டது.
"அமைதியைக் கடைப்பிடிக்க வேண்டும் மற்றும் நன்னடத்தையுடன் இருக்க வேண்டும்" என்ற நிபந்தனையை அவர் மீறியதாகக் கூறி, தற்போது சானிச் (Saanich) காவல்துறை அவருக்கு எதிராகப் பிடிவிராந்து பிறப்பித்துள்ளது.
இந்த நபர் மிகவும் தந்திரமாகப் பேசி ஏமாற்றுவதில் வல்லவர்," என்று பொலிஸார் எச்சரித்துள்ளனர்.
மேலும், ஆன்லைன் அல்லது தொலைபேசி வாயிலாக மட்டுமே பழகிய எவருக்கும் ஒருபோதும் பணம் அனுப்ப வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.