இங்கிலாந்தில் நீர் வெட்டு; பல சேவைகள் ஸ்தம்பிதம்; கடும் சினத்தில் மக்கள்
இங்கிலாந்தின் கென்ட் மற்றும் கிழக்கு சசெக்ஸ் பகுதிகளில் நிலவும் தொடர்ச்சியான குடிநீர் தட்டுப்பாடு காரணமாக அப்பகுதி மக்கள் பெரிதும் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளதாக பிரித்தானிய தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் கோபமடைந்த மக்கள், ‘டிரை வெல்ஸ் ஆக்ஷன்’ (Dry Wells Action) என்ற அமைப்பை உருவாக்கி அதிகாரிகளுக்கு எதிராகக் குரல் எழுப்புகின்றனர்.

அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களது மருத்துவப் பணிகளை ரத்து
நீர் விநியோகத்தில் ஏற்படும் திடீர் தடைகள் மக்களின் அன்றாட வாழ்க்கையைச் சிதைப்பதுடன், பாடசாலைகள் மூடப்படுவதற்கும் மருத்துவச் சேவைகள் பாதிக்கப்படுவதற்கும் காரணமாகின்றன.
குறிப்பாக, அறுவை சிகிச்சை நிபுணர்கள் தங்களது மருத்துவப் பணிகளை ரத்து செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. இதன் காரணமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது.
அதேசமயம் உள்ளூர் நீர் விநியோக நிறுவனம் இந்த முக்கியமான பொதுக்கூட்டங்களைப் புறக்கணிப்பது பொதுமக்களிடையே பெரும் நம்பிக்கையின்மையையும் கோபத்தையும் தூண்டியுள்ளது.
நீர் வெட்டு தற்காலிகமாகச் சீர் செய்யப்பட்டாலும் , எதிர்காலத்தில் மீண்டும் இதுபோன்ற துயரம் நிகழும் என்ற அச்சம் மக்களிடையே எழுந்துள்ளதாக சுட்டிகாட்டப்பட்டுள்ளது.