வெண்டைக்காய் ஊறிய நீர்! கிடைக்கும் பலன்கள் என்ன தெரியுமா?
பொதுவாக வெண்டைக்காய் வழவழப்புத்தன்மை கொண்ட ஒரு காய்கறியாகும். அது வழவழப்பான தன்மை கொண்டதால் பலருக்கும் பிடிக்காத ஒரு காயாக இருக்கிறது.
இருப்பினும் வெண்டைக்காயில் புரதம், நார்ச்சத்து, கொழுப்பு, கால்சியம், இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், சோடியம், வைட்டமின் சி, வைட்டமின் பி1, வைட்டமின் பி2, வைட்டமின் பி-6, வைட்டமின் பி9 என ஏராளமான சத்துகள் உள்ளன.
நான்கைந்து வெண்டைக்காயை, சிறுசிறு துண்டுகளாக நறுக்கி, ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு, எட்டு மணி நேரம் கழித்து பார்த்தால் வெண்டைக்காயில் உள்ள வழவழப்பு தன்மை முழுவதும், ஊறவைத்த நீரில் கலந்து இருக்கும். இதுதான் வெண்டைக்காய் குடிநீர்.
இந்த வெண்டைக்காய் ஊரிய நீரை குடித்துவர, பல நோய்கள் குணமாகும். தற்போது அவை என்னென்ன என்பதை தெரிந்து கொள்வோம்.
- வெண்டைக்காய் குடிநீர் இது ரத்த செல்கள் வேகமாக உற்பத்தி செய்கிறது. இதன் மூலமாக ரத்த அளவு அதிகரிக்கும். ரத்த சோகை குணமாகும். அனிமியா பிரச்சனைனால அவதிப்படுபவர்கள் இந்த வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்து வர மிகவும் நல்லது.
- வெண்டைக்காயில் இயற்கையாகவே இன்சுலின் அடங்கி இருக்கிறது. அதிலும் ஊறிய நீரை, சர்க்கரை நோயாளிகள் காலை வெறும் வயிற்றில் குடித்து வர, ரத்தத்தில் இருக்கக்கூடிய சர்க்கரையின் அளவு கட்டுப்படும்.
- வெண்டைக்காயை, கரையக்கூடிய நார்ச்சத்து, அதிக அளவில் இருக்கிறது. குறைவான கலோரியைக் கொண்ட காய் என்பதினால் கொலஸ்ட்ரால் பிரச்சனை காரணமாக அவதிப்படுறவங்க, இதை தாராளமா சாப்பிட்டு வரலாம்.
- வெண்டைக்காய் ஊறிய நீரை குடித்துவர, இதில் இருக்கக்கூடிய கரையக்கூடிய நார்ச்சத்து, இரத்தத்தில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்பின் அளவை குறைத்து, கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் கொண்டு வரும்.