ஆரஞ்சு வண்ண உடை அணிந்து சிறப்பு கூட்டங்களை முன்னெடுக்கும் பி.சி ஆசிரியர்கள்
பிரிட்டிஷ் கொலம்பியாவில் ஜூன் 4 வரை அனைத்து பள்ளிகளிலும் அரைக் கம்பத்தில் கொடி பறக்க விடப்படும் என ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
மட்டுமின்றி ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட அனைவரும் ஆரஞ்சு வண்ண உடை அணிந்து சிறப்பு கூட்டங்கள் முன்னெடுக்க முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பூர்வ குடி சிறார்கள் 215 பேர்கள் புதைக்கப்பட்ட கல்லறை ஒன்று பாடசாலை ஒன்றின் வளாகத்தில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், ஆசிரியர்கள் கூட்டமைப்பு இந்த முடிவை எடுத்துள்ளது.
பூர்வ குடி மாணவர்களுக்கு இனி சிறப்பு கவனம் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் ஆசிரியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
கம்லூப்ஸ் இந்திய உறைவிட பள்ளியை கத்தோலிக்க தேவாலயம் ஒன்று 1890 முதல் 1969 வரை முன்னெடுத்து நடத்தியுள்ளது.
இதனையடுத்து கனேடிய நிர்வாகம் முன்னெடுத்து நடத்தியதுடன், 1978-ல் அந்த பள்ளியை மூடியுள்ளது.