உக்ரைன் போருக்கு இவர்களே காரணம்! ரஷ்ய அதிபர் தெரிவித்த தகவல்
உக்ரைன் போருக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) தெரிவித்துள்ளார்.
உக்ரைன் மீதான ரஷ்ய போர், உலகளவில் தொடர்ந்து தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.
இரண்டாம் உலகப்போரில் நாஜிக்களின் ஜெர்மனியை ரஷியா வென்றதன் 77-வது ஆண்டு தினத்தை ரஷியா நேற்று கொண்டாடியது. இதையொட்டி தலைநகர் மாஸ்கோவில் பிரமாண்ட ராணுவ அணிவகுப்பு நடைபெற்றது.
அதன் பின்னர் அதிபர் புதின் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார்.
அப்போது அவர், “உக்ரைன் மீதான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கைக்கு மேற்கத்திய நாடுகளே காரணம்.
மேற்கத்திய கொள்கைகள் இந்த ராணுவ நடவடிக்கையை தூண்டின. உக்ரைனில் ரஷ்யா மேற்கொள்ளும் இந்த நடவடிக்கை சாத்தியமான ஆக்கிரமிப்பைத் தடுக்க சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட மற்றும் தேவையான நடவடிக்கை ஆகும்” என்றார்.
இதனிடையே இரண்டாம் உலகப்போரின் வெற்றி தினத்தையொட்டி உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,
இரண்டாம் உலகப்போரில் நம் முன்னோர்கள் செய்ததை நாம் மறக்க மாட்டோம். இன்று கொண்டாடுவதை போல இன்னும் ஒரு வெற்றி நாளை விரைவில் கொண்டாடுவோம். அப்போது வென்றோம், இப்போதும் நாம் வெல்வோம்” என கூறினார்.