ரஷ்யாவில் பிரிவினை வாதத்தை ஊக்குவிக்கும் மேற்கத்திய நாடுகள்
யுரேசியன் பொருளாதார யூனியன் (EAEU) மாநாட்டில் கலந்து கொண்ட ரஷ்யா ஜனாதிபதி புட்டின், ரஷ்யாவில் பிரிவினைவாதத்தை மேற்கத்தேய நாடுகள் ஊக்கப்படுத்தியதாக குற்றம்சாட்டினார்.
இது தொடர்பாக புட்டின் கூறியதாவது,
ஐ.எஸ். (Islamic State), ரஷ்யாவுக்கு எதிராக செயல்படும் வரை யாரும் அதன்மீது கவனம் செலுத்தவில்லை.
மாஸ்கோவில் குண்டு வெடிப்பு நடைபெற்றது. இன்னும் நடைபெற்று கொண்டிருக்கின்றன. யாரும் இதில் கவனம் செலுத்த விரும்புவதில்லை.
ரஷ்யாவிற்கு எதிராக இருந்தால் எல்லாம் நன்றாக இருக்கும் என்று விரும்பினர்.
நமது நாட்டில் பிரிவினைவாதத்தை கூட்டு மேற்கத்திய நாடுகள் ஊக்குவித்தபோது, தீவிரவாதம் போன்ற தாக்குதல் நடத்த அது ஒரு கருவியாக இருந்தது.இவ்வாறு தெரிவித்தார்.