போதைப்பொருள் கொடுக்கப்பட்டு அத்துமீறலுக்காளான 30க்கும் அதிகமான மாணவிகள்: பிரபல பல்கலைக்கழகத்தில் பதறவைக்கும் செய்தி
கனடாவின் பிரபல பல்கலைக்கழகம் ஒன்றில் 30க்கும் அதிகமான மாணவிகளுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டு பாலியல் ரீதியில் தாக்குதலுக்குள்ளானதாக எழுந்துள்ள பரபரப்புக் குற்றச்சாட்டு பெற்றோர்களை பதறவைத்துள்ளது.
கனடாவின் லண்டனிலுள்ள Western University என்ற பல்கலைக்கழகத்தில், சென்ற வார இறுதியில் 30க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு போதைப்பொருள் கொடுக்கப்பட்டு அவர்கள் பாலியல் ரீதியில் தாக்கப்பட்டதாக சமூக ஊடகங்களில் செய்தி பரவி வருகிறது.
பிரச்சினை என்னவென்றால், இதுவரை ஒரு மாணவி கூட நடந்ததாக கூறப்படும் தாக்குதல் குறித்து புகாரளிக்கவில்லை.
ஒரே ஒரு மாணவர் மட்டும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
As the father of four young women, I am beyond disgusted to hear about the allegations of sexual assault that took place at Western University last week. All victims of sexual violence deserve justice. All students should feel safe on campus.https://t.co/ztZ03IocI3
— Doug Ford (@fordnation) September 14, 2021
ஒன்ராறியோவின் பிரீமியரான Doug Ford இது குறித்து ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், நான்கு பெண் பிள்ளைகளின் தகப்பன் என்ற முறையில் நான் இந்த செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ளேன். பாதிக்கப்பட்ட பிள்ளைகளுக்கு நீதி கிடைக்கவேண்டும். மாணவர்கள் தங்கள் தங்குமிடங்களில் பாதுகாப்பாக உணர்வது அவசியம் என்று கூறியுள்ளார்.
பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ள இந்த செய்தியைத் தொடர்ந்து பல்கலைக்கழகமும், லண்டன் பொலிசாரும் பாதிக்கப்பட்டவர்கள் முன்வந்து புகாரளிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.