யாழில் தனிமையில் வசித்த பெண்ணுக்கு நேர்ந்த நிலை
யாழ்ப்பாணம் தொல்புரம் பகுதியில் தனிமையில் வசித்த பெண்ணொருவரை வீட்டினுள் அத்துமீறி நுழைந்த இருவர் தாக்கியுள்ளனர்.
குறித்த பெண் வீட்டில் தனிமையில் வசித்து வரும் நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை இருவர் வீட்டின் வளாகத்தினுள் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களை உடைத்துச் சேதப்படுத்திய பின்னர் வீட்டின் பிரதான கதவை சேதப்படுத்தி வீட்டினுள் அத்து மீறி நுழைந்து பெண் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
அத்தோடு அப் பெண்ணின் நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
விசாரணை
சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து , சம்பவ இடத்துக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்த போது, நகைகளும் கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை முதல் கட்ட விசாரணைகளின் அடிப்படையில் , இரு குடும்பங்களுக்கு இடையிலான தனிப்பட்ட பிரச்சினை காரணமாகவே பெண்ணின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என தாம் சந்தேகிப்பதாக பொலிஸ் தரப்பு தெரிவிக்கிறது.