வெளிநாடொன்றில் அதிகார துஸ்பிரயோகம்; அரச அதிகாரிக்கு நேர்ந்த கதி!
பஹ்ரைனில் அதிக அளவில் ஓய்வூதியத் தொகைப் பெறுவதற்காக அரச அதிகாரி ஒருவர், தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி சட்டவிரோதமாக தனது சம்பளத்தை உயர்த்தியுள்ள நிலையில் சந்தேக நபருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை சிறைதண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
கடந்த 2008ஆம் ஆண்டு 1950 தினார்கள் மாதச் சம்பளத்தில் நியமிக்கப்பட்ட குறித்த நபர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தனது சம்பளத்தை 2100 தினார்களாக மாற்றியுள்ளதாகக் கூறப்படுகின்றது.
இந்த விவகாரம் தெரியவந்ததும் அவர் பணியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். எனினும், அவருக்கு வழங்கப்பட்டிருந்த தனிப்பட்ட அடையாள எண்ணைப் பயன்படுத்தி சம்பளத்தை 3300 தினார்களாக திருத்தி உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் அவர் மீது குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படவே விசாரணையின் முடிவில் அவர் மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபணமானது.
இதையடுத்து குறித்த அதிகாரிக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தும், 15,000 தினார் அபராதமாக விதித்து, நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளதாக கூறப்படுகின்றது.