அமெரிக்காவில் அவசரமாக மேம்பாலத்தில் தரையிறங்கிய விமானத்தால் நேர்ந்த கதி!
அமெரிக்காவின் புளோரிடா மாகாணம் புரோவர்ட் நகரில் உள்ள விமான நிலையத்தில் இருந்து ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது.
அந்த விமானத்தில் ஒரு விமானியும், 2 பயணிகளும் இருந்தனர். குறித்த விமானம் மியாமி நகருக்கு மேலே பறந்து கொண்டிருந்தபோது திடீரென விமானத்தில் எந்திரகோளாறு ஏற்பட்டது.
தொடர்ந்து, விமானி விமானத்தை அங்குள்ள ஒரு மேம்பாலத்தில் அவசரமாக தரையிறக்க முடிவு செய்து விமானம் மேம்பாலத்தில் அவ சரமாக தரையிறங்கியபோது எதிர்பாராதவிதமாக ஒரு காரின் மீது மோதியது.
இதில் விமானம் தீப்பிடித்து முற்றிலுமாக எரிந்தது உருக்குலைந்துபோனது. இந்த கோர விபத்தில் விமானத்தில் பயணம் செய்த ஒருவர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி உயிரிழந்தார்.
விமானத்தில் இருந்த மற்ற 2 பேரும் படுகாயங்களுடன் உயிர் தப்பினர். மேலும் விமானம் மோதிய காரில் பயணம் செய்த ஒரு பெண் மற்றும் 2 குழந்தைகள் படுகாயமடைந்தனர்.
அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த மீட்பு குழுவினர் படுகாயமடைந்த 5 பேரையும் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.