கனடா எல்லையைத் திறப்பது எப்போது? நிபுணர்களின் கருத்து
கனடா, அமெரிக்காவுடனான எல்லை எப்போது திறக்கப்படும் என்ற கேள்விக்கு கனேடிய நிபுணர்கள் பதிலளித்துள்ளனர்.
கனடா அமெரிக்காவுக்கு இடையிலான எல்லை, சுற்றுலா போன்ற அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக 2020 மார்ச் முதலே மூடப்பட்டுள்ளது.
எல்லை மூடுதல் தொடர்பான இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம், மே மாதம் 21ஆம் திகதி புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அந்த ஒப்பந்தத்தின் கீழ், இறுதிச்சடங்கு முதலான காரணங்களுக்காகவும், அகதி நிலை கோரி விண்ணப்பித்தல் முதலான காரணங்களுக்காகவும் மட்டும் மக்கள் எல்லை வழியாக அனுமதிக்கப்படுவார்கள்.
ஆனால், முன்போல் எப்போது நம்மால் எல்லை தாண்டி தினமும் சென்றுவர முடியும் என்ற கேள்வி பலரது மனங்களிலும் ஒலிக்கிறது.
அந்த கேள்விக்கான என்னுடைய பதில், அதற்கு மிக மிக நீண்ட காலம் ஆகும் என்பதுதான் என்கிறார் வெளியுறவுக் கொள்கை நிபுணரான Aaron Ettinger.
இன்னும் சில மாதங்களுக்காவது எல்லை மூடியே இருக்கும் என தான் நம்புவதாக தெரிவிக்கிறார் Aaron. 2021 இலையுதிர்காலம் வரையிலாவது எல்லை மூடித்தான் இருக்கும் என்கிறார் அவர்.
அதற்குக் காரணம், கடந்த ஆண்டு இருந்ததை ஒப்பிடும்போது, இப்போதைய நிலைமை அதைவிட 10 மடங்கு மோசமாக இருப்பதுதான் என்று Aaron கூறுகிறார்.
அமெரிக்கா, கனடாவை விட அதிக அளவில் தன் குடிமக்களுக்கு தடுப்பூசி போட்டுவிட்டது என்று கூறும் Aaron, அதனால் எல்லைப் பிரச்சினை எளிதில் தீராது என தான் கருதுவதாக தெரிவிக்கிறார்.
ஆகவே, கனேடிய சுற்றுலாப்பயணிகளை எல்லை தாண்டி கனடாவுக்குள் அனுமதிக்க அமெரிக்கா அந்த அளவுக்கு ஆர்வம் காட்டாது என்று கூறும் Aaron,
ஆனால், அமெரிக்கர்களை கனடா எப்படி நடத்தவேண்டும் என அமெரிக்கா விரும்புமோ, அதேபோலத்தானே கனடாவும் தன் மக்கள் அமெரிக்காவில் நடத்தப்படவேண்டும் என விரும்பும் என்கிறார்.