வூஹான் ஆய்வகத்தின் பாதுகாப்பு தொடர்பில் கவலை வெளியிட்ட உலக சுகாதார அமைப்பு!
உலகையே ஆட்டிப் படைத்து வருகிறது கொரோனா பெருந்தொற்று. முதன்முதலில் மனிதருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது தெரியவந்தது சீனாவின் வூஹான் மாகாணத்தில் தான். அங்குள்ள கடல் வாழ உயிரினங்களை விற்பனை செய்யும் சந்தையில் இந்த தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டதை அனைவரும் அறிவோம்.
இந்நிலையில் அந்த சந்தைக்கு அருகில் உள்ள ஆய்வகத்தின் பாதுகாப்பு தரக் கட்டுப்பாட்டு விஷயங்கள் தனக்கு கவலை கொடுப்பதாக உலக சுகாதார அமைப்பின் உயர்மட்ட நிபுணர் குழுவை சார்ந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதனை தெரிவித்துள்ளது உலக சுகாதார அமைப்பின் நிபுணரான பீட்டர் பென் எம்பரேக். ஆவணப்படம் ஒன்றில் இதனை தெரிவித்துள்ளார்.
உலக சுகாதார அமைப்பு சீனாவின் ஆய்வகத்திலிருந்து கொரோனா தொற்று பரவி இருக்க வாய்ப்பில்லை என சொல்லி இருந்த நிலையில் அந்த அமைப்பின் நிபுணர் ஒருவர் அதற்கு முரணான கருத்தை சொல்லியுள்ளது சர்ச்சையை எழுப்பியுள்ளது.
அமெரிக்கா உட்பட உலக நாடுகள் பலவும் இந்த விஷயத்தில் தொற்று ஆய்வகத்திலிருந்து பரவியதா? என்று கவனம் செலுத்தி வருகின்றன.