வீட்டின் முன் தொங்கியிருந்த பெண்ணின் உள்ளாடையை திருடிய இளைஞர்கள்.. விசாரணையில் காரணத்தை கேட்டு அதிர்ந்துபோன போலீசார்
உத்திரப்பிரதே மாநிலம் மீரட் நகரில் வசித்து வருபவர் சஞ்சய் சவுத்ரி. இவர் காவல் நிலையத்தில் அதிர்ச்சியான புகார் ஒன்றை அளித்துள்ளார். அந்த புகாரில், இரண்டு இளைஞர்கள் தன்னுடைய மகளின் உள்ளாடைகளை திருடிச்சென்றதாகவும், அதற்கான வீடியோ ஆதாரம் தன்னிடம் இருப்பதாகவும் அவர் போலீசாரிடம் கூறியுள்ளார்.
இதன்பின்னர் அந்த வீடியோவை சோதனை செய்தபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் வீட்டு வாசலில் காய்ந்துகொண்டிருந்த பெண்ணின் உள்ளாடையை திருடி சீட்டுக்குக் கீழே வைத்து பூட்டி விட்டு, வேகமாக சென்ற பதிவாகியுள்ளது. இதனைத்தொடர்ந்து, இந்த வீடியோ காட்சி இணையத்தில் வைரலான நிலையில், போலீசார் வீடியோ ஆதாரத்தை வைத்து, இரண்டு வாலிபர்களையும் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து, அந்த இளைஞர்கள் விசாரணையில் கூறியதாவது, தாங்கள் வேடிக்கைக்காக இளம் பெண்ணின் உள்ளாடையை திருடியதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கின்றனர்.
இதையடுத்து, அவர்கள் இருவர் மீதும் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.