மனைவிக்கு வேறு ஒருவருடன் திருமணம்..அதிர்ச்சியில் உறைந்த கணவன்
சமூக வலைதளத்தில், தன் மனைவி வேறு ஒருவருடன் திருமணம் செய்யும் காட்சியை பார்த்த கணவர் அதிர்ச்சி அடைந்தார்.
ஆசிய கண்டத்தில், சீனா, ரஷ்யா எல்லையை ஒட்டி உள்ளது, மங்கோலிய நாடு. இங்கு, பயன்னுரைச் சேர்ந்த ஒரு இளைஞர், தரகர் வாயிலாக பெண் பார்த்து திருமணம் செய்தார். முதலிரவுக்கு முன், அந்த பெண் கேட்ட, 17 லட்சம் ரூபாயும் கொடுத்தார். சில நாட்களில் அந்த பெண், தாய் வீட்டிற்குசெல்வதாக கூறிச் சென்றார்.
அதன் பின், தொடர்பு எல்லைக்கு அப்பால் உள்ளதாக மொபைல் போனில் வந்த தகவலை தான் கணவரால் கேட்க முடிந்தது. இந்நிலையில், சமூக வலைதளம் ஒன்றில் தன் மனைவி, வேறு ஒருவருடன் திருமணம் செய்யும் காட்சியை, அந்த வாலிபர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே, மாமியார் வீட்டிற்கு சென்று பார்த்த போது, அங்கு பெரிய பூட்டு தொங்கியது. அப்போது தான் அவருக்கு பெண்ணால் மோசம் போனது தெரியவந்தது.
அவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார், வலை வீசி தேடி, ஒருவழியாக அந்த பெண்ணை கைது செய்தனர்.
அந்த பெண், இதுபோல, 19 பேரை திருமணம் செய்து, 2.28 கோடி ரூபாய் மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்தது. பெண்ணின் பெற்றோராக நடித்த தரகர் உள்ளிட்ட இருவரும் கைது செய்யப்பட்டனர்.