மீண்டும் கனேடிய நகரம் ஒன்றில் அதிகரிக்கும் காட்டுத்தீ... 200 வீடுகளிலுள்ளவர்கள் வெளியேற்றம்
மீண்டும் கனேடிய நகரம் ஒன்றில் காட்டுத்தீ பரவத்தொடங்கியுள்ளதைத் தொடர்ந்து, அந்த பகுதியில் அமைந்துள்ள 200 வீடுகளில் வாழ்பவர்கள் வெளியேற்றப்பட்டுள்ளார்கள்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் Okanagan பள்ளத்தாக்கு பகுதியில் அமைந்துள்ள Osoyoos என்ற நகரத்தில் காட்டுத்தீ பரவத்தொடங்கியுள்ளதையடுத்து, அப்பகுதியில் இருக்கும் 200 வீடுகளில் வாழ்வோர் வீடுகளை விட்டு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளார்கள்.
நேற்று பற்றிய அந்த காட்டுத்தீ, சிறிது நேரத்தில் மூன்று ஹெக்டேர் பரப்பிலிருந்து 300 ஹெக்டேர் அளவுக்கு பரவியது. இரவு 9 மணி வாக்கில், அது 700 ஹெக்டேர்களை கபளீகரம் செய்திருந்தது.
இதற்கிடையில், Oliver பகுதி தீயணைப்பு வீரர்கள் வீடுகளை தீப்பற்றாமல் தடுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினார்கள். கடும் போராட்டத்துக்குப் பின், ஒரு வீடு கூட தீப்பற்றாமல் அவர்கள் காப்பாற்றியிருக்கிறார்கள்.
வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள் Oliver-Osoyoos பகுதியிலுள்ள ஹொட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.
சிலர் மட்டும் தங்கள் வீடுகளிலிருந்துவிட்ட நிலையில், வெளியேற்றம் அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் இருப்போர் உடனடியாக வீடுகளை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Helicopters picking up water off Osoyoos Lake to fight the new wildfire in Oliver. #BCWildfire @cbcnewsbc @BCGovFireInfo pic.twitter.com/qB609bQX7I
— Anita Bathe (@anitabathe) July 20, 2021