5 பிள்ளைகளுடன் வாகனத்தில் அதி வேகமாக சென்ற பெண்
வாசகா கடற்கரை பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் வாகனத்தில் அதிவேகமாக சென்றதையடுத்து சிம்கோ ஏரி அருகே பொலிசாரால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
30 வயதான குறித்த பெண் ஒருவகை போதையில் இருந்துள்ளதாக டர்ஹாம் பிராந்திய பொலிசார் தெரிவித்துள்ளனர். ஜூலை 30ம் திகதி வெள்ளிக்கிழமை இரவு 9.30 மணியளவில் குறித்த சம்பவம் பிரதான சாலை 12ல் நடந்துள்ளது.
முதற்கட்ட விசாரணையில் குறித்த பெண் ஒருவித போதையில் இருந்துள்ளதுடன், வாகனத்தை அதிவேகமாகவும் செலுத்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி தடுத்து நிறுத்தப்பட்ட அந்த வாகனத்தில் மொத்தம் ஐந்து சிறுவர்களும் இருந்துள்ளனர். சிறுவர்களை பத்திரமாக மீட்டு அவர்களின் குடியிருப்புகளுக்கு அனுப்பி வைத்துள்ளதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.
குறித்த பெண்ணை கைது செய்துள்ள பொலிசார் அவர் மீது ஒரு பிரிவில் வழக்கு பதிந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.