தரையிறங்கிய விமானம் மோதி இளம்பெண் பரிதாப மரணம்
மாண்ட்ரீலுக்கு வடக்கே தரையிறங்கிய விமானம் மோதியதில் இளம்பெண் ஒருவர் இறந்துவிட்டதாக கியூபெக் மாகாண பொலிசார் தெரிவித்துள்ளனர்.
20 வயது கடந்த குறித்த பெண் செயின்ட் எஸ்பிரிட் அருகே ஓடுபாதைக்கு அருகில் ஒரு டிராக்டரில் சென்று கொண்டிருந்தார் என தெரிய வந்துள்ளது.
அப்போது தரையிறங்கிய விமானம் மோதி, குறித்த பெண் படுகாயமடைந்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ பகுதிக்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர், குறித்த பெண்ணை மீட்டு அருகாமையில் உள்ள மருத்துவமனையில் சேர்ப்பித்துள்ளனர்.
ஆனால், காயங்கள் காரணமாக, குறித்த பெண் மருத்துவமனையில் வைத்து மரணமடைந்ததாக தெரிய வந்துள்ளது.
விமானம் தரையிறக்கப்படும் போது, அதன் விமானி டிராக்டரில் பயணிக்கும் நபரை கவனிக்கவில்லை என்றே கூறப்படுகிறது.
இந்த அதிர்ச்சியில், தற்போது விமானியும் மருத்துவ சிகிச்சையில் உள்ளார் என தெரிய வந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பில் தற்போது பொலிசார் விசாரணை முன்னெடுத்து வருகின்றனர்.