100 இறந்த பூனைகளுடன் வீட்டில் வாழ்ந்து வந்த நபர்
பிரான்சில், பெண் ஒருவர் தனது உறவினரை மருத்துவமனையில் சேர்த்தபோது, அவரது குடியிருப்பில் எண்ணற்ற பூனைகள் இறந்து கிடந்ததைக் கண்டுபிடித்தார்.
பிரான்சில் நைஸ் பகுதியில் குடியிருந்து வந்துள்ளார் 81 வயதான நபர். இவரது குடியிருப்பில் இருந்தே 100 இறந்த பூனைகளும் உயிருடன் 20 பூனைகளும் மீட்கப்பட்டுள்ளது.
திங்களன்று, இந்த விவகாரம் தொடர்பில் மிருக நல அமைப்பு ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பூனைகளின் கழிவுகளை சிறிய பிளாஸ்டிக் அல்லது மரத்தாலான பெட்டிகளில் அந்த முதியவர் பாதுகாத்து வந்துள்ளதும் கண்டுபிடிக்கப்பட்டது.
செல்லப் பிராணிகளை வளர்க்கும் ஆர்வம் அதிகமாக கொண்டவர் அந்த நபர் என உள்ளூர் பத்திரிகை ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
திடீரென்று அந்த நபருக்கு உடல்நலக் கோளாறு ஏற்படவே, அவரது உறவினர் பெண் ஒருவரே பூனைகளின் சடலங்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதை கண்டறிந்தார்.
இதனையடுத்து மிருக நல அமைப்பு ஒன்றிற்கு தகவல் அளிக்க, அவர்கள் வந்து உயிருடன் 20 பூனைகளை மீட்டுள்ளனர்.
சுமார் 100 பூனைகள் சடலமாக பெட்டிக்குள் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.