டொரண்டோவில் 62 வயது முதிய பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்
கனடாவின் டொரண்டோவில் முதிய பெண் ஒருவர் தகாத செயல்பாட்டுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
62 வயது முதிய பெண் ஒருவர் இரவு வனப்பகுதிக்குள் இழுத்துச் செல்லப்பட்டு வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, டொரண்டோ போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த சம்பவம் புதன்கிழமை இரவு 10:40 மணியளவில், ஹாவர்ட் பார்க் அவென்யூ மற்றும் பார்க்சைடு டிரைவ் அருகே நடந்துள்ளது.
பாதிக்கப்பட்டவர் ஒரு சாலையோர நடைபாதையில் நடந்து சென்றபோது, பின்னால் வந்த மர்ம ஆணொருவர் அவரை வனப்பகுதிக்குள் இழுத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பின்னர், அந்த பெண் குற்றவாளியிடமிருந்து தப்பித்து ஓடி, வழியாக வந்த ஒரு பொதுமகளிடம் உதவி கோர, அவர் போலீசுக்கு தகவல் அளித்துள்ளார்.
இந்த தாக்குதலில் பெண் காயமடைந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து ஏதும் இல்லை என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
கருப்பினத்தவரான குறித்த ஆண் சுமார் 5 அடி 10 அங்குலம் உயரமான ஒலிலியான உடல் அமைப்பினைக் கொண்டவர் என தெரிவிக்கப்படுகின்றது.
குற்றவாளி தற்போது தலைமறைவாக உள்ள நிலையில், போலீசார் அவரை விரைவில் அடையாளம் காணும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வழக்கை பொது பாதுகாப்பு கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.