இங்கிலாந்தில் புறாக்கு உணவிட்ட பெண்ணுக்கு 150 பவுண்டுகள் அபராதம்
இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்குச் சுற்றுலா சென்ற இளம்பெண் ஒருவர், புறாவிற்கு சிறிய துண்டு உணவை வழங்கியதற்காக 150 பவுண்டுகள் அபராதம் விதிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சவுத்போர்ட் பகுதியைச் சேர்ந்த சாம் எல்கின் (23) என்ற பெண்ணிற்கே இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 9 ஆம் திகதி தனது பிறந்தநாளைக் கொண்டாடுவதற்காகத் தனது துணையுடன் மான்செஸ்டர் நகரின் பிக்காடில்லி கார்டன்ஸ் பகுதிக்கு அவர் சென்றிருந்தார்.

ஒரு சிறிய துண்டு மெக்டொனால்ட்ஸ்
சாம் எல்கின் தனது துணையுடன் அமர்ந்து மெக்டொனால்ட்ஸ் உணவைச் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த புறா ஒன்றிற்குத் தனது உணவில் இருந்து ஒரு சிறிய துண்டு டொர்டிலாவை போட்டுள்ளார்.
அவர் உணவைப் போட்ட அடுத்த கணமே அங்கு வந்த நகர சபையின் அமலாக்க அதிகாரி, பொது இடத்தில் குப்பை கொட்டியதாக கூறி அவருக்கு 150 பவுண்டுகள் அபராதம் விதித்துள்ளார்.
புறா அந்த உணவைச் சாப்பிட்டுவிட்டு அவ்விடத்தை விட்டுச் சென்ற பின்னரே அதிகாரி எம்மை நெருங்கினார். தரையில் எந்த உணவும் எஞ்சியிருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியும் அவர் கேட்கவில்லை என பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
புறாவிற்கு உணவளிப்பது குற்றம் என்று எனக்குத் தெரியாது. எனது ஊரில் நான் எப்போதும் பறவைகளுக்கு உணவளிப்பேன். ஆரம்பத்தில் அவர் எச்சரிக்கை விடுக்கப்போவதாகவே நான் நினைத்தேன் எனவும் அந்த பென் வேதனை வெளியிட்டதாக கூறப்படுகின்றது.